கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி, பேரின வகையில் தக்காளி இனத்தையும், செடி வரிசையில் கத்திரி வகையையும் சார்ந்தது என தாவரவியலாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

* கண்டங்கத்திரியின் இலைகள் முழுவதும் வரியோட்டமாக நரம்புகள் போல் காணப்படும். இதன் முட்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்டங்கத்திரியின் பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில் காணப்படும்.
* கத்திரி வகை செடி என்பதால் அந்தக் காயினுள் இருப்பதைப் போன்று, இதன் உட்புறத்திலும் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிற விதைகள் அதிகளவில் காணப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி ஏராளமாகக் கொண்டுள்ள கண்டங்கத்திரிக்கு, தொண்டையில் நுழைந்து நம்முடைய உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனுடைய பழங்கள் மற்றும் தண்டுகள் நமது உடலில், பலவிதமான நோய்களை உருவாக்கும் எண்ணற்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை.
* கண்டங்கத்திரி இலையை நன்றாகப் பொடியாக்கி, அதே அளவு சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து, மார்பில் பூசி வர, வாத நோய்கள் குணமாகும். பொதுவாகவே, முட்கள் நிறைந்த மூலிகைகளுக்குச் சளி பிடித்தல், மூக்கடைப்பு ஆகிய சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.
* கண்டங்கத்திரி இலையுடன் சிறிதளவு தூதுவளை, ஆடாதொடை இலைகளைச் சேர்த்து நன்றாக வெயிலில் காய வைத்து, தூளாக்கி, தினமும் ஒரு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், கொரோனா வைரஸ் உண்டாக்கும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விரைவில் குணமாகும்.
கண்டங்கத்திரி இலையைச் சாறாக்கி, அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால், பல நாளாக உள்ள வெடிப்பும் விரைவில் குணமாகும். இதில் Urolithiatic தன்மை உள்ளதால், இதன் சாறை ஒன்றரை தேக்கரண்டி தினமும் குடித்தால், சிறுநீர் எரிச்சல், தொற்று, கடுப்பு ஆகியவை நீங்கும்.
* கண்டங்கத்திரியின் வேர் சிறுநீரகத்தில் உருவாகிற கற்களைக் கரைக்கும். சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும் கண்டங்கத்திரியில் உள்ள அல்காலாய்ட்ஸ்(Alkaloids), ஃப்ளேவனாய்ட்ஸ் (Flavonoids), க்ளைகோசைட்ஸ்(Glycosides) ஆகியவை நோயை உண்டாக்கும் வைரஸ் ஏற்படுத்தும் கோழை, ரத்த கொதிப்பு, சுவாசம் தொடர்பான பிரச்னைகளைச் சரி செய்யும்.